
வானம் ...
வாழ்க்கை ...
வாய்ப்புக் காற்றுகளில்
வானளக்க எத்தனித்தேன் .
நிலவு தொடும் ஆசை எனக்கு.
நித்திரைகள் நிஜமானால்
நீள்வட்டம் நீந்திக் கடந்து செல்வேன் .
மின்னல்கள் என்வானில் .
மின்மினிப் பூச்சியென நான் .
நிலவென்று உனைக் கண்டேன் .
மின்னல்கள் மழையானது.
உன் சிரிப்பினில் நனைந்து போனேன்.
புல்வெளிகளில்
மழைத்துளி பனித்துளியாய்
என்மனக் காடுகளில் உன் காதல் காட்டாறாய் ...
வண்டுகள் வண்ணத்துப் பூச்சிகளோடு
பூக்களின் வாசமும்
உனதன்புப் பரிகாசங்களும்...
ஸ்வாசமாய்.
பூக்களை நேசிக்கிறேன்
பூ வாசமாய் நீ
முதன்மலராய் நீ ...
தீண்டிய விரல்களிலெல்லாம் மருதாணி
சிவப்பதோ நீ ...
உன் கண்களில் நான்
கன்னக்குழிகளில் புதைந்ததும் நானே .
காதல் பூ கனியானது
காட்டாறும் நதியானது .
சுதந்திரக் காடுகளில்
அடிமையாய் நான் -
- நீ தான் என் அரசி.
கேட்காமலே கொடுத்துச் சென்றாய்
விடுதலை
பரிசாக கண்ணீர்த் துளிகள் .
எங்கு கற்றாய் இதயம் நொறுக்கிடும் பாடம்
எனக்குத் தெரியாமல் .
நாம் மயங்கிக் கிடந்த காடுகளில்
இப்போது
இலையுதிர்காலம் .
கிளையொடிர்காலம்...
பூக்கள் தேடிக் கிடக்கின்றேன் .
ஒரே முட்புதர்கள் .
நதி வறண்டது.
நானும் ,,,,,,,,,,,,,,,
திசையெல்லாம் நீ .
தொடத்தான் முடியவில்லை - மாயை .
இறந்தது இதயம்
உபயம் - நீ
மயானமாய் பூமி -
- மயானப் பூக்களில் வாசமில்லை .
பூமி வேண்டாம்
பூமி வேண்டாம் .
இலட்சிய வானில்
பறக்க மீண்டும் எத்தனிக்கிறேன் .
சிறகுகளைக் கிழித்துவிட்டாய்
சின்னாபின்னமாய் உடைத்துவிட்டாய் .
நம்பிக்கைச் சிறகு என்னோடு
நட்புகளும் என்னோடு.
திமிராய்ப் பறப்பேன் - தீரா வெறியோடு ...
இம்முறை
நிலவுதொடும் ஆசையில்லை...
பால்வெளிகளில் தான்
எனது புல்வெளி .
பால் வீதிகளில் தான்
எனது கல்லூரி .
அதைத் தாண்டும் ஆயிரமாயிரம் ஆசை
கனவு
இலட்சியமாய் ...
நெஞ்சில் எரிகிற நெருப்பில்
சூரியனும் சாந்தமாகும்
சூழ்நிலைகள் சாத்தியமாகும் ...
என்றும் அன்புடன்
என்ஸ்ரீவெங்கடேஷ் ...